களவாடிய பொழுதுகள்
#களவாடிய பொழுதுகள்
கண் இமை மூடும் நேரம்
கண்மணியவளை கடத்தியது யாரோ...
விழித்திரையில் பதிந்தவள்
உள்ளத்தில் பதியாமலே
பார்வைகளை திருடியபடி...
பூத்திருந்த மலரைத்தான்
கூந்தலில் பூச்சூடிட
யாரும் பார்க்காத நேரமதில்
நேசத்தோடு பறித்திட
சட்டென குத்தியது -அந்த
ரோஜா முள்
முள் குத்திய காயம் காணாமல்
அவள் சொல் குத்திய இதயம்
களவாடி சென்ற பொழுதுகளை
கலைக்காமல் திருப்பிடுவாளா..?
சீட்டுக் கட்டு மாளிகையாய்
சிதறத்தான் செய்திடுவாளோ..
என்னையுமறியாமல்
திருடிச் சென்ற பொழுதுகளையும்...