களவாடிய பொழுதுகள்

#களவாடிய பொழுதுகள்

கண் இமை மூடும் நேரம்
கண்மணியவளை கடத்தியது யாரோ...

விழித்திரையில் பதிந்தவள்
உள்ளத்தில் பதியாமலே
பார்வைகளை திருடியபடி...

பூத்திருந்த மலரைத்தான்
கூந்தலில் பூச்சூடிட
யாரும் பார்க்காத நேரமதில்
நேசத்தோடு பறித்திட
சட்டென குத்தியது -அந்த
ரோஜா முள்

முள் குத்திய காயம் காணாமல்
அவள் சொல் குத்திய இதயம்

களவாடி சென்ற பொழுதுகளை
கலைக்காமல் திருப்பிடுவாளா..?

சீட்டுக் கட்டு மாளிகையாய்
சிதறத்தான் செய்திடுவாளோ..
என்னையுமறியாமல்
திருடிச் சென்ற பொழுதுகளையும்...

எழுதியவர் : சா.மனுவேந்தன் (28-May-19, 1:56 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 374

மேலே