பேருக்குத் தகுந்த மாதிரி
ஏன்டப்பா முருகப்பா, உம் பேரப் பசங்க ரண்டு பேரும் அவுங்க பேருக்குத் தகுந்த மாதிரி அவுங்க நடந்நுக்குறாங்கடா.
@@#@
என்னம்மா சொல்லறீங்க?
@@@@@#
மூத்த பேரனுக்கு நீ கோபக்குமார்னு பேரு வச்ச. அவன் எதச் சொன்னாலும் கோவிச்சுக்கிறான். காலைல பல் தீட்டுடா சாமின்னு கோபம்னு சொன்னேன். ஏழு மணிக்கு கோவிச்சிட்டு எங்கயோ போனவன் ஒரு மணி நேரமா அவன் ஊட்டுக்கு திரும்பி வரல. எதுக்குடா அவனுக்கு கோபக்குமாருன்னு பேரு வச்சீங்க?
@@##
சரிம்மா. அவனத் தேடிட்டு எம்மவன் கண்ணாஜி போயிருக்கிறாம்மா?
@@@@
பேரன் கண்ணாசி போயிருக்கறனா? சரி, சரி.
@@@@@
சரி எஞ் சின்னப் பேரன் ரோஷன் என்ன தொல்லை தர்றான்.
@@@@@₹
அவுனும் அவம் பேருக்குத் தகுந்த மாதிரி அவனப் பத்தி எந்தக் கொறையச் சொன்னாலும் அவுனுக்கு ரோசம் வருது. தம்ளர் தூக்கி செவுத்து மேல வீசி அடிக்கிறான். ஏன்டப்பா முருகப்பா, தமிழ்ல இல்லாத அழகான பேரா இந்தில இருக்குது? ஏன்டா பிள்ளைங்களுக்கு அர்த்தம் தெரியாத கண்ட பேருங்கள வச்சு உங்கள கேவலப்படுத்திக்கறீங்க?
@@@@@
அம்மா எனக்கு முருகப்பான்னு பேரு வச்சீங்க. என் வயசுல உள்ள தொண்ணூறு சதவீதம் பேரு இந்திப் பேருங்கள வச்சிருக்காங்க. காலம் மாறிப்போச்சு. தமிழ்ப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கிறது தான் கேவலம்.
@@@@@
தன்மானம் இல்லாத உங்கிட்ட எல்லாம் தாய் மொழிப் பற்ற எதிர்பாக்க முடியாதுடா முருகப்பபா.