திரும்பித்தான் தொலையேன்

திரும்பித்தான் தொலையேன்.
====================================================ருத்ரா

டேய்
எத்தனை தடவைடா உன்னைப்பார்ப்பது?
இந்த பெண்கள் அமுக்குளிகள்
என்று யாரடா சொன்னார்கள்?
உன்னை
என் இதயத்தின் ஆழத்துக்குள்
அமுக்கிக்கொண்டிருக்கிறேன்.
அதனால் சொல்லியிருப்பார்கள்
அமுக்குளிகள் என்று.
போதும்
முகம் திருப்பியது.
உன்
அழுக்கு வான தலைக் கிராப்பை
சிலுப்பி
அந்த மின்னல் பிஞ்சை
இங்கே கொஞ்சம் அனுப்புடா!
என் மார்புக்கூடு என்னும்
கண்ணாடித்தொட்டியிலிருந்து
வெளியே துள்ளி விழுந்து
மீனாகத்துடிப்பது
நீயும் நானுமே!
அதனால்
இங்கே கொஞ்சம்
திரும்பித்தான் தொலையேன்!

================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (30-May-19, 11:03 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 132

மேலே