திருடன் தோப்பு
பதிவுகள் எல்லாம்
நிஜங்களில்லை ..
நிஜங்கள் எல்லாமே
பதிவுகளாவதில்லை ..
சில வக்கிரர்களின்
வஞ்சனை வாசம்
சில கோபக்காரர்களின்
கோர முகச்சாயம்
சில சூழ்நிலைக்காரர்களின்
சூட்சம சூழ்நிலையியல்
சில ஏமாற்றுக்காரர்களின்
ஏகாதிபத்திய சித்தாந்தம்
இப்படியேனும்
பலதரப்பட்ட
குளறுபடிகள்
குப்பைத்தொட்டியாகவே
பல வரலாறுகள்
வலுவிழந்து
வசைபாடப்படுவதற்கு
வாக்காக அமைந்தது விட்டது ...
எதிர்கால தலைமுறையில்
வரலாறுகள் மாற்றியெழுதப்படாது
மாறாக
மாற்றி எழுதப்பட்டவைகளெல்லாம்
வரலாறாக ஓங்கி நிற்கும் ....