பிறக்கும் உயிர்கள் பேசும்
ஆன்ம பலம் உள்ள நாட்டில்
மொழியே மருந்து ஆச்சுதய்யா.
திரவியங்கள் பல்கி பெருகி
தினமும் நன்மை ஆச்சுதய்யா.
பிறக்கும் உயிர்கள் பேசும் மொழி
செழிக்கும் தமிழாய் ஆச்சுதய்யா
தெளிந்த அறிவு பெற்றோன் எல்லாம்
சிறந்த தமிழன் ஆனான்னைய்யா
உயர்ந்த பிறப்பைப் பெற்ற நாடு
செழித்த தமிழ் நாடே ஆகும்
உலகை ஒலியால் விழிக்க செய்த
உயர்ந்த மொழியைப் போற்றிடுவோம்!
--- நன்னாடன்.