காதல் வலி 70

உன்
தலைப் பூ
உன்
சேலைத் தலைப்பு
இவையே
இறைவன் எனக்கு
கவிதை எழுதக் கொடுத்தத் தலைப்பு

நீ பன்னிரண்டு
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கும் மலைப்பூ
உன்னைக் காணும்
கண்ணிரண்டும்
கொள்வதோ மலைப்பு

நீ என்னை
தேவையின்றி
வதை செய்யும் தேவதை

உன்னிடம்
தண்ணீர் வாங்கிக்
குடிக்காது
தண்ணீரில் எதையோ
கடைகின்றனர்
தேவர்கள்

நீ தேனியில்
பிறந்த தேன் ஈ
நீ
என்னை கதல்
எனும் சிலுவையில்
அறைந்த ஆணி
நான் உன்னை
சுற்றித் திரிந்த ஆண் ஈ

நீ
கிளிண்டன் வளர்த்தக்
கிளி அல்ல
கிளியோபாட்ரா
வளர்த்தக் கிளி
உன்னைக் கண்டதிலிருந்து
என் நெஞ்சில்
வாழ்கிறது காதலனும் கிலி

பூவைத் திறந்தால்
தேன் இருக்கும்
பூவையே
உன் நாவைத் திற
நான் இருப்பேன்

நீ அமமுக ( அழகிய மங்கைகள்
முன்னேற்றக் கழகம்) வின் தலைவி
நான் தினமும்
உன் நலனையே நினைக்கும்
தினகரன்

நீ நயன்தாராவின்
தங்கச்சி
நான்
உன் கட்சி

நீ காவிரி
நான் விவசாயி
எனக்கு மட்டும்
செவிசாயி

எழுதியவர் : புதுவை குமார் (4-Jun-19, 10:25 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 236

மேலே