மலையாளத்தில்---சிறந்த இசை பாடல்கள்

[படம் நெல்லு

இசை சலீல் சௌதுரி

பாடல் வயலார் ராமவர்மா

பாடியவர் லதா மங்கேஷ்கர்]



கதலி கண்கதலி செங்கதலி பூ வேணோ

கவிளில் பூமதமுள்ளொரு பெண்பூ வேணோ பூக்காரா?



முகளில் டிலு டிலு டிங்கிலமோடே

முகில்பூ விடர்த்தும் பொன்குடக்கீழே

வரில்லே நீ வனமாலி? தரில்லே தாமரத்தாலி?

தெய்யர தெய்யரத் தாரே



கிளிகள் வள குலுக்கண வள்ளியூர் காவில்

களபம் பொழியும் கிக்கிளிக்கூட்டில்

உறங்கும் நித்யமென் மோகம் உணர்த்தும் வந்நொரு நாணம்



முளய்க்கும் குளிர் முகக்குரு முத்துகள் போலே

முளம்பூ மயங்ஙும் குந்நினு தாழே

நினக்கீ தூவலு மஞ்சம் நிவர்த்தீ வீண்டுமென் நெஞ்சம்

தெய்யர தெய்யர தாரே


கதலிப்பூ. Malabar melastome

தமிழில் கதலைப்பூ

[தமிழில்]



கதலி கண் கதலி செங்கதலி பூவேணுமா?

கன்னத்தில் பூம்பொடி மணக்கும் பெண்பூ வேணுமா பூக்காரா?

தெய்யர தெய்யர தாரே



மேலே டிலு டிலு டிலு டிங்கில ஒலியோடு

முகில்பூ விரிக்கும் பொன்குடைக்குக் கீழே

நீ வரமாட்டாயா வனமாலி? தரமாட்டாயா தாமரைத்தாலி?

தெய்யர தெய்யர தாரே



கிளிகள் வளையலோசை எழுப்பும் வள்ளியூர் கோயிலில்

களபம் பொழியும் கிளிக்கூட்டில்

உறங்கும் என்றும் என் மோகம். எழுப்பும் வந்து ஒரு நாணம்

தெய்யர தெய்யர தாரே



முளைக்கும் குளிர் முகப்பரு முத்துக்கள்போல

மூங்கில்பூ மயங்கும் குன்றின் கீழே

உனக்காக இந்த இறகுமஞ்சம் விரித்தது மீண்டும் என் நெஞ்சம்







படம் பொன்னி

இசை தேவராஜன்

பாடல் வயலார் ராமவர்மா

பாடியவர் ஏசுதாஸ்]





மார்கழியில் மல்லிக பூத்தால்

மன்னார்காடு பூரம், மன்னார்காடு பூரம்

காடிறங்கி நீயும் ஞானும்

காணான்போகண பூரம்

காணான்போகண பூரம்



கண்ணே நின் கைபிடிச்சு

காவு சுற்றண நேரம்

சின்னகட பெரிய கட

சிந்தூரக்கட கேறாம்

குப்பிவள வாங்ஙாம் குப்பாயத்துணிவாங்ஙாம்

சிப்பிவள வாங்காம் பின்ன சோப்புசீப்பு வாங்ஙாம்

சோப்பு சீப்பு வாங்ஙாம்!



குந்திப்புழ கரையிலுள்ள குளிரு கோரும் காற்றில்

பந்தலிச்சு பீலி நீர்த்தும் புன்னாகத்தின் சோட்டில்

என்றெ மாறில் நீ மயங்கும் நின்றே மாறில் ஞான் மயங்கும்

கண்டு கண்டு கொதிச்சோட்டே பூமியும் நீலவானும்

பூமியும் நீலவானும்







[பாலக்காடு அருகிலுள்ள மன்னார்காடு தேவி கோயிலில் பூரம் என்னும் திருவிழா]







குந்திப்புழா ஆறு



மார்கழியில் மல்லிகை பூத்தால்

மன்னார்காட்டு திருவிழா

மன்னார்காட்டுத் திருவிழா



காடு இறங்கி நீயும் நானும்

காணப்போகும் திருவிழா



கண்ணே உன் கைபிடித்து

கோயிலைச் சுற்றிவரும் நேரம்

சின்னகடை பெரியகடை சிந்தூரக்கடை போவோம்

கண்ணாடிவளையல் வாங்குவோம். ரவிக்கைத் துணிவாங்குவோம்

சிப்பிவளையல் வாங்குவோம் பின்னர் சோப்புசீப்பு வாங்குவோம்



குந்திப்புழை ஆற்றின் கரையில் உள்ள குளிரச்செய்யும் காற்றில்

பந்தலாக விரிந்து நிற்கும் புன்னை மரத்தின் அடியில்

என் மார்பில் நீ மயங்க உன் மார்பில் நான் மயங்க

கண்டு கண்டு ஆசைப்படட்டும் பூமியும் நீலவானமும்

பூமியும் நீலவானமும்







[படம் பணிதீராத வீடு

இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர் ஏசுதாஸ்]



நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே
ஜோதிர்மயியாம் உஷஸினு
வெள்ளீச்சாமரம் வீசும் மேகங்ஙளே
சுப்ரஃபாதம் சுப்ரஃபாதம்!



அஞ்சனக் கல்லுகள் மினுக்கி அடுக்கி

அகிலாண்ட மண்டல சில்பி

பணிஞ்ஞிட்டும் பணிஞ்ஞிட்டும் பணிதீராதொரு

பிரபஞ்ச மந்திரமே

நின்றே நாலுகெட்டின்றே படிப்புர முற்றத்து

ஞான் என்றே முறிகூடி பணியிச்சோட்டே



ஆயிரம் தாமர தளிருகள் விடர்த்தி

அரயன்னங்ஙளே வளர்த்தி

வசந்தமும் சிசிரமும் குளிக்கானிறங்குந்ந

வனசரோவரமே

நின்றே நீல வார்முடிக் சுருளின்றே அற்றத்து

ஞான் என்றே பூகூடி சூடிச்சோட்டே



[தமிழில்]



நீலமலையின் தோழிகளே, சுடர்முகத்தவர்களே!
ஒளிவடிவாம் புலரிமகளுக்கு
வெள்ளிச்சாமரம் வீசும் மேகங்களே!
நல்காலை! நற்காலை!



கரிய கற்களை செதுக்கி அடுக்கி

அகிலத்தைப் படைத்த சிற்பி

கட்டியும் கட்டியும் கட்டிமுடியாத

பிரபஞ்சமெனும் மாளிகையே

உன் நாலுகட்டு முற்றத்தில்

நானும் என் அறையைக் கட்டிக்கொள்கிறேனே



ஆயிரம் தாமரை தளிர்களை விரித்தாய்

அன்னங்களை வளர்த்தாய்

வசந்தமும் பனிக்காலமும்

நீராடுவதற்கு இறங்கும்

காட்டுப் பொய்கையே

உன் நீலக்குழல் சுருளின் ஓரத்தில்

நான் ஒரு மலரைச் சூட்டிக்கொள்கிறேனே





படம் கரகாணாக்கடல்

இசை தேவராஜன்

பாடல் வயலார் ராமவர்மா

பாடியவர் சுசீலா



காற்று வந்நு கள்ளனே போலே

காட்டு முல்லைக்கு ஒரு உம்ம கொடுத்து

காமுகனே போலே



முல்லவள்ளிக்கு ஆசகலம் முத்து கிளிர்த்து

மணிமுத்தினு ஓலக் குட பிடிச்சு விருச்சிக மாசம்



பொன்குரிசின் குந்நின்மேல் திங்களுதிச்சு

வனமுல்ல நிந்நு நகம் கடிச்சு முகம் குனிச்சு



தென்னல் வீண்டும் வந்நாலோ உம்ம தந்நாலோ

அது வெண்ணிலாவொ தும்பிகளோ கண்டு நிந்நாலோ



[தமிழில்]



காற்று வந்தது கள்வனைப்போல

காட்டு முல்லைக்கு ஒரு முத்தம் கொடுத்தது

காதலனைப்போல



முல்லைக்கொடிக்கு உடலெங்கும் முத்து முளைத்தது

அந்த மணிமுத்துக்கு ஓலைக்குடைபிடித்தது கார்த்திகை மாதம்



பொன்சிலுவை ஏந்திய குன்றின்மேல் திங்கள் எழுந்தது

வனமுல்லை நின்று நகம் கடித்து முகம் குனித்தது



தென்றல் மீண்டும் வரக்கூடுமோ முத்தம் தருமோ

அதை வெண்ணிலவோ தும்பிகளோ பார்த்துவிடுமோ?

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (7-Jun-19, 3:37 am)
பார்வை : 161

மேலே