தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!

நற்காரியங்களில் மனம் செல்லட்டும் குழந்தாய்
உன் மனதை நீ புரிந்துகொள்ள வேண்டும் குழந்தாய்
புலன் அடக்கம் வேண்டும் குழந்தாய்
சகிப்புத் தன்மை, விவேகம் வேண்டும் குழந்தாய்
மனதில் வைராக்கியம்,(தாய்மை,நட்பு ,காதல் ) உறவுகளில் தவம்,
சொல்லில் வாய்மை, செயலில் நேர்மை, சிந்தையில் கருணை,
அகத்தில் மகிழ்ச்சி,மனிதர்களில் நம்பிக்கை வேண்டும் குழந்தாய்
புலால் உண்பதில் கூச்சப்படுதல் வேண்டும் குழந்தாய்
தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி) வேண்டும் குழந்தாய்
தானம், பணிவு மற்றும் எளிமை வேண்டும் குழந்தாய்
அகிம்சை வழியில் சாத்வீகமாக மனதை ஆளப்பிறந்த குழந்தை நீயன்றோ!

~ நியதி ~



(சத்துவ குணம் )

எழுதியவர் : நியதி (9-Jun-19, 7:07 pm)
பார்வை : 426

மேலே