காதல்
அழும் மழை
உச்சி நுகர்ந்து
ரோம உதிர்வினில்
காவியமாய் விரித்தெழுந்து
விழி அசைவினில்
உருண்டு வரும்
கனல் நீரை
மறைக்கும் ஓரம்
மேகம் கொண்ட
காதல் வேட்கைதனில்
பிறந்த அவனின்
புன்சிரிப்பு
உணர்த்தியது
என் உயிர்
உடலினின்று
பிரியாததை...