உன் நினைவுகளில் தினம் வாழ்கிறேன்

உன் நினைவுகளில் தினம் வாழ்கிறேன். 💐

இதோ இந்த அடுகளையில்
அழகிய முகத்தில்
வியற்வை முத்துக்கள் பூக்க
பரபரப்புடன் காலை
சமையல் சமைக்கிறாய்.

அதோ அந்த தோட்டத்தில்
ஒயிலாக நடந்து
சிரித்து வரவேற்கும் பூக்களை, பூக்களுக்கு வலிக்காமல் கொய்கிறாய்.

வேலை கிளம்பியவுடன்
ஏதோ மறந்ததாக
சாக்கு சொல்லி,
சற்றும் நீ எதிர் பாராமல்
உன் இதழில் என் இதழ் பதிக்க,
முகம் சிவந்த வெட்கபட்டு
என்னை விட்டு ஓடுகிறாய்.

அலுவலக பிரச்சனையுடன்
வீடு வந்த என்னை,
அன்போடு பேசி,
கலைப்பு தீர காபி கொடுத்து , அரவனைப்போடு என் தலை கோதுகிறாய்.

மொட்டை மாடியில் துணி
உலர்த்தும் போது
திருடன் போல் நான் வந்து
உன் சின்ன இடையை சீண்டியதும்,
விடுங்கள் என்று
ஒரு மோக பார்வை
பார்க்கிறாய்.

இதோ இந்த தனி
படுக்கையறையில்
நான் கட்டிலில் படுத்து கிடக்க,
நீ பக்கத்தில் நெருக்கமாக அமர்ந்து, குனிந்து என் நெற்றியில்
முத்தம் இட்டு,
உங்களை தான்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்கிறாய்.

உன் நினைவில் தினம் வாடுகிறேன்.
உன் நினைவில் தினம் வாழ்கிறேன்.
யாரோ சொன்னார் படிபடியாக மறந்து விடுங்கள் என்று.
உன்னை மறந்தால் அந்த நொடி நான் நிச்சயம் இறந்து கிடப்பேன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (19-Jun-19, 4:22 pm)
சேர்த்தது : balu
பார்வை : 477

மேலே