நாகரீகமாய்

நடக்க நடக்க
நன்றாய் ஆகிறது,
காட்டில்
நாம் நடக்கும்
ஒற்றையடிப் பாதை..

நாகரீக உலகில்
நாம் போட்ட ரோடு,
நாளடைவில்
நலிந்துவிடுகிறதே
குண்டும்குழியுமாய்-
நம் வாழ்க்கை போல..

நலிந்து போவதுதான்
நாகரீகமோ...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Jun-19, 4:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : naagareegamaay
பார்வை : 83

மேலே