காதல் மயக்கம்

அவள் மனதில் ஏதோ இனம் புரியாத ஏக்கம்
அழகிய வதனம் காட்டிக் கொடுக்கிறது
வெதுவெதுப்பாகின்றது அவள் மனம் என்று,
அவள் உதடுகள் பாடலை முணுமுணுக்க மறுக்கின்றது
கண்கள் வெறிச்சோடி ஏக்கத்துடன்
இதில் யாரோ ஒருவன் அவள் மனதிற்குள்
எவருக்கும் சொல்ல முடியவில்லை அவளால் ,
எக்கச்சக்கமாய் அவளிடம் அந்த ஒருவன்.
எவனோ ஒருவனுக்காய் ஏன் இந்த மயக்கம் ,
புரிந்தும் புரியாத பருவம் அவளுக்கு
இருந்தும் அவள் மீண்டு வர வழியுண்டு
தன் பெற்றோரிடம் சகோதரர்களிடம் சொல்லி விட்டால்
அவளுக்கு ஏதோ ஒரு வகையில் மீண்டு வர முடியும் ,
ஆனால் அச்சமும் நாணமும் அவளை அடகுக்குகின்றது
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடம் போல் அவளுக்கு
ஆனாலும் அவனை மறந்து விட மனமில்லை
தொடர்ந்து பயணிக்கின்றாள் காதலின் பாதையில்
மனதை தொட்டு விட்ட அவன் காதலை நோக்கி .....

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jun-19, 12:08 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaadhal mayakkam
பார்வை : 348

மேலே