நான் யார்?

உன்னிடம்
பேச வந்தால்
ஊமையாகிறேன்...
உன்னிடம்
மோதாமலே
தோற்றுப் போகிறேன்...
உன்னை காணாவிடின்
கண்கள் நொந்து போகிறேன்..
உன் நிழல் தீண்டாவிடின்
அங்கம் வெந்து போகிறேன்...

நான் யார்
உன்னிடத்தில் ...

யாரோ நான்
உன்னிடத்தில் மட்டும்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (25-Jun-19, 2:18 pm)
பார்வை : 64

மேலே