கண்ணனின் முத்தங்கள்

தத்தி தத்தி நடந்து வந்து
குண்டு மல்லி விழி திறந்து
கள்ள விழி பார்வை தந்து
கன்னத்தில் குழி நெகிழ
தாமரை இதழ்கள் அலர்ந்து
மாய கண்ணன்போல சிரித்து வந்து
தாவி என் மீது என் இடுப்பில் வந்தமர்ந்து
என் கன்னங்கள் இரண்டையும்
முத்தத்தால் நனைத்து துன்பத்தில்
இன்பம் காணவைக்கும் உன் முத்தங்கள்
கண்ணே கண்ணா கண்ணனின் முத்தங்கள்
ஆரா துயரங்களுக்கும் அரு மருந்தே அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (27-Jun-19, 7:55 am)
Tanglish : kannanin muthangal
பார்வை : 111

மேலே