நல்லோர் தழுவ நினையார் நரகத்தீது வருமென்று தெரிந்து - நீதி வெண்பா 41

நேரிசை வெண்பா

கன்னியரை பொன்னாண் கழிந்தோரை மற்றயலார்
பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய
தாதியரை நல்லோர் தழுவநினை யார்நரகத்
தீதுவரு மென்று தெரிந்து. 41 நீதி வெண்பா

பொருளுரை:

நல்லோர் நரகத் துன்பம் வருமென்று அறிந்தே

இளங் கன்னிகைகளையும், பொன்னாலாகிய மங்கலியம் இழந்த விதவைகளையும்,

பிறர் மனைவியரையும், வஞ்சனையுடைய வேசிகளையும்,

இச்சிக்கத் தகாத தாசிகளையும் சேர நினைக்க மாட்டார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-19, 9:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே