நல்லோர் தழுவ நினையார் நரகத்தீது வருமென்று தெரிந்து - நீதி வெண்பா 41
நேரிசை வெண்பா
கன்னியரை பொன்னாண் கழிந்தோரை மற்றயலார்
பன்னியரை மாயப் பரத்தையரை - முன்னரிய
தாதியரை நல்லோர் தழுவநினை யார்நரகத்
தீதுவரு மென்று தெரிந்து. 41 நீதி வெண்பா
பொருளுரை:
நல்லோர் நரகத் துன்பம் வருமென்று அறிந்தே
இளங் கன்னிகைகளையும், பொன்னாலாகிய மங்கலியம் இழந்த விதவைகளையும்,
பிறர் மனைவியரையும், வஞ்சனையுடைய வேசிகளையும்,
இச்சிக்கத் தகாத தாசிகளையும் சேர நினைக்க மாட்டார்.