பெற்றறியா வந்தி நொந்துஅறிகு வாளோ நுவல் - நீதி வெண்பா 15

நேரிசை வெண்பா

கற்றோர் கனமறிவர் கற்றோரே கற்றறியா
மற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்
நொந்துஅறிகு வாளோ நுவல். 15 நீதி வெண்பா

பொருளுரை:

படித்தவர்களுடைய பெருமையைப் படித்தவர்களே அறிவார்கள்; படிப்பறிவில்லா மூடர்கள் அறியமாட்டார்கள்;

வருத்தமுண்டாகப் (பிள்ளையைப்) பெற்றறியாத மலடியானவள் ஆசையுடன் பிள்ளையைப் பெறுந் துன்பத்தை வேதனைப்பட்டு அறிந்திருப்பாளோ சொல்வாயாக எனப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-19, 10:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே