பெற்றறியா வந்தி நொந்துஅறிகு வாளோ நுவல் - நீதி வெண்பா 15
நேரிசை வெண்பா
கற்றோர் கனமறிவர் கற்றோரே கற்றறியா
மற்றோர் அறியார் வருத்தமுறப் - பெற்றறியா
வந்தி பரிவாய் மகவைப் பெறும்துயரம்
நொந்துஅறிகு வாளோ நுவல். 15 நீதி வெண்பா
பொருளுரை:
படித்தவர்களுடைய பெருமையைப் படித்தவர்களே அறிவார்கள்; படிப்பறிவில்லா மூடர்கள் அறியமாட்டார்கள்;
வருத்தமுண்டாகப் (பிள்ளையைப்) பெற்றறியாத மலடியானவள் ஆசையுடன் பிள்ளையைப் பெறுந் துன்பத்தை வேதனைப்பட்டு அறிந்திருப்பாளோ சொல்வாயாக எனப்படுகிறது.