செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரி - நீதி வெண்பா 16
நேரிசை வெண்பா
செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே - செய்யவொரு
நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்
பொற்கொடியைச் சேர்துயரம் போல். 16 நீதி வெண்பா
பொருளுரை:
செய்ய வேண்டிய ஒரு செயலை அதனைச் செய்வதற்குரிய உபாயத்தை முன்னே யோசித்துச் செய்வதல்லாமல்,
யோசியாமல் செய்தால், முன்னாளில் சிறப்பாக ஒரு நல்ல குடும்பத்தைக் காத்துக் கொண்டிருந்த கீரிப் பிள்ளையைக் கொன்ற அழகிய பிராமணப் பெண்ணைச் சேர்ந்த துன்பத்தைப் போல மனத்துயரம் உண்டாகும்.