புன்னகை ஒன்றை நீ உதிர்த்து விட்டால்
தடாகத்தில் தண்ணீர் பெருகினால்
தானே மலரும் தாமரை
வான வீதியின் நீலத்தில் இரவு விரிந்தால்
தானே நடந்து வரும் நிலவு
இளவேனில் காலம் வருகை புரிந்தால்
இலக்கியம் எழுதும் தென்றல்
மௌனப் புன்னகை ஒன்றை நீ உதிர்த்து விட்டால்
என் கவிதை முத்துக்கள் சிந்தும் !