நானும் சுவாசம் கொள்வேன்

நம் நிழலை நாம் விரும்பாததால் என்னவோ நம்மை விட்டு பிரிந்தே விழுகின்றன...
நீயும் விரும்பவில்லை
நானும் நிழல் போல் இல்லை...

காமம் தொட்ட காதல்,
காகம் கரைய விலகும்...
உயிர்மம் உறையும் காதல்
உலகம் நிறைய விளையும்...

வாழ்ந்த காலம் யாவும்
கண்ணீரில் கரைந்தால் என்ன... கண்ணீர் சுமந்த மெய்யும்,
கருவாடாய் போனால் என்ன... வரும்காலம் உந்தன் காதலில்,
கழிந்து போனால் போதும்,
என் காதல் தேசக்காற்றில் நானும், கரைந்த போனால் போதும்

மெய்யில் காதல் காணா
மேன்மை காதலர் மெய்யில்
உயிராய் காதல் ஓங்க
நானும் சுவாசம் கொள்வேன்... நாளும்நன் றோர்காதலை
நரையெ னனினியச் செய்வேன்... நானும் கல்லறை போயின்
காதல் கருவறை உய்யும்
நம் காதல் கருவறை உய்யும்...

எழுதியவர் : கல்லறை செல்வன் (2-Jul-19, 10:06 pm)
பார்வை : 370

மேலே