காதல்
பலாச்சுளையின் வாசம்
முகர்ந்தால் தெரியும்
ஆனால் அதன் ருசி
சுளையை அருந்திட்டால்
அன்றி தெரியாது -அதுபோல்
பெண்ணே உந்தன் சிரிப்பு -அந்த
சிரிப்பொலி காதிற்கினிமையே
ஆனால் கண்ணே அது தந்த
உந்தன் தேன் இதழ்கள் கொண்டு
எனக்கு நீ தரும் முத்தல்லவோ
அந்த சிரிப்பிற்கு நிறைவு தரும்
இனிய காதல் நிறைவு