கடைவிழியில் காதல் சொன்னாள்

கரம்பிடித்தான் காளை கவிதையை அன்பில்
வரமென்று வாழ்த்தினர்நல் லோர் !

மலர்விழிக்கு மாலையிட் டான்மன்னன் தென்றல்
கடைவிழியில் காதல்சொன் னாள் !

வளைக்கரத் தாள்வலம்வந் தாள்பிறவி ஏழிற்கும்
நீயேஎன் றாள்விழி யால் !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-19, 5:12 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 67

மேலே