உறக்கம்

பாலைவன மழை போல்  இடைவெளிகளின் ரணத்திற்குப் பின் 
என் பார்வையில் அவன்..!
பகிர்ந்துகொள்ள 
பல நினைவுகள் இருந்தும்.., 
மவுனத்திலும் கண்ணீரிலும்
நகர்ந்து கொண்டிருந்த நாழிகைகள்..!
விழிகளின் மொழிகளை முதலாய் உணர்கிறேன்..!
என்னவனே..,
வாடிப் போன என் உயிர் இன்று உன் சந்திப்பால் உயிர்பெற ..,
தூக்கிலிடப்பட்ட தூக்கங்களை சுமக்கும் என் இரவுகள் உன் தூரத்தால் ...!
இன்று.., புது உலகின் தடயங்களுடன் நி்ம்மதியாய் என் 
நித்திரைக்கனவுகள்..!

எழுதியவர் : சரண்யா (6-Jul-19, 5:39 am)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
Tanglish : urakam
பார்வை : 246

மேலே