உணருவோம் உன்னதத்தை

கனிமம் என்றால் அது காண அரிதானது - எந்த
காரணியாலும் அதைக்கொடுக்க முடியாதது

கிடைக்கும் இடத்திலிருந்து அதை எடுத்துவிட்டால்
கிழப்பருவம் எய்தியதைப் போல் மாறும் அவ்விடம்

காகித காசுக்காக கடைத்தெருவில் விற்றுவிட்டால்
கடுந்துன்பம் பற்றி உருக்குலைந்து போவோம்

மண்ணும் மலையும் மரமும் மணலும் ஒரு நாள் போனால்
உன்னால் என்னால் உயர்வான அறிவியலால் உருவாக்கலாமோ

தன்னாலே உருவான தனித்துவத்தை - மனித
தவறால் உருக்குலைத்தல் செய்வது உயர்வோ?
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jul-19, 8:27 pm)
பார்வை : 199

மேலே