அடங்கவே மாட்டியா நீ

ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்..
என் பிடிப்பை மீறி
காற்றின் விசாரிப்பில்
பறக்கத் தொடங்குகிறது காகிதம்..
நானோ எழுத நினைக்க
என்னை விட்டுப் பிரிய நினைக்கிறது காகிதம்..
அருகில் அமர்ந்திருந்த குட்டிப்பெண்
நான் படும் பாட்டைக் கண்டு
உலவிக் கொண்டிருந்த காற்றைப் பிடித்து
"அடங்கவே மாட்டியா நீ" என மிரட்டி
வாய்க்குள் போட்டுக்கொள்கிறாள்..
அவளது அன்பு அதட்டலில்
அடங்கித்தான் போகிறது காற்று..

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (13-Jul-19, 12:55 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 88

மேலே