மண்ணின் மா ரதி
யாதொன்றும் எழுத
ஒன்றுமற்ற செம்மாலையில்
சாலையில்திரிவ தென் பழக்கம்.
அஃதறிந்த விற்புருவத்தி அவளும்
கானமயிலாடியது போல் தானும்
திரிவதறிந்து கொள்ள
முயன்றபோழ்தில் நானொரு
தினத்தில் அக்கலை மாண்பினை
திருச்செல்வியாம் சாரற்புதல்வியாம் அக்கலைமானுக்கு பயிற்றிட
மாலைகள் யாவும் எங்கட்க்கு
மஞ்சத்து பூக்களாய் மலர்ந்தது.
வனச்சோலையில் பூத்தலையும்
மலர்வாசங் கொண்ட மதியுடன்
கங்கை நதிப்புறத்து கோதுமை
பண்டங் கொறித்து சிரித்து
உசாவிய அத்தொரு தினத்தில்
ஆசை ததும்பிட கேட்டாள்.
அத்தான் பார்த்து மயங்கிய
ஒளிக்காட்சியொன்றினை அனுப்புக.
நேற்று நள்ளிரவில் கண்டிட்ட
இளங்கன்னி அடாப்ஸியை அனுப்ப...
தனிமை மிக்கயிவ்வந்தியில்
எழுத முடிகிறது ஏதேனுமொன்று
எந்தச் சிலவுமின்றி.
___:______________:_______:___________