நறுந்தொகை 22
கொண்டோ ரெல்லாம் பெண்டிரும் அல்லர். 22
அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை:
மணஞ் செய்து கொள்ளப்பட்ட மனைவியரெல்லாரும் நல்ல மனைவியரும் ஆகார்.
கணவன் குறிப்பறிந்து பணிசெய்து நடப்பவளே மனைவியென்று சொல்லுவதற்குத் தகுதியுடையவள் ஆகும்.
பெண்டிரும் என்பதிலுள்ள உம்மை மேல் வந்த பிள்ளைகள், உறவினர் என்பவற்றைத் தழுவியது.