என் காதல் இளவரசன்
என் இளவரசன் 🌹
உன் ஆளுமையில் ஆச்சிரியபட்டு
உன் கம்பீரத்தில் ஆளாய் பறந்து
உன் அறிவில் வியந்து
உன் அழகில் மயங்கி
உன் பேச்சில் கிறங்கி
உன் கவிதையில் கரைந்து
உன்னிடம் என் மனதை பறி கொடுத்து விட்டேன்
என்னை ஆளபிறந்தவனே வா
இளவரசனே வா அங்கிகாரத்துடன் வா
என் அருகில் வா
என் இடை உன் கரம் பற்ற ஏங்குகிறது
என் இதழ் உன் இதழால்
கவிதை எழுத துடிக்கிறது
ஆண் மகனே
என் பெண்மை உனக்காக
வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது.
-பாலு