கவியரங்க அழைப்பு

மிசிகனில் கவிஞர் சல்மா அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் (ஜூலை 20 2019 ) கவியரங்கத்துக்கு , பெண்ணியம் சார்ந்த கவிதைகளை கேட்டு , மிச்சிகன் மக்களை கலந்து கொள்ள சொல்வதற்காக எழுதியது

மிச்சிகன் வாழ் தமிழர்களே !!!
கோடையின் தகிப்பதனை
தமிழிட்டு குறைத்திடவே !
தமிழ்சங்கம் நடத்திடுதே !
கவியரங்க நிகழ்ச்சி ஒன்று !
"கவிஞர் சல்மா" வின்
தலைமைதனில் !
டிராய் நகரிலே
சூலைத் திங்கள் 20 ம் நாள்
மாலை 5 மணி முதல் 7 மணி வரை
பொங்கி வரும் தமிழை
கேட்டு மகிழ வாருங்கள் !

சிந்தனையை செப்பனிட
செவிகளுக்கு விருந்தளிக்க
கவிப்புலமையை பறைசாற்ற
இதோ
முத்தான மூன்று தலைப்புகள்

1 . நெஞ்சு பொறுக்குதில்லையே !
2 .கர்வம் ஓங்கி வளருதடி !
3 . அமிழ்தில் இனியதடி!

பெண்ணியம் கருப்பொருள் !
பெண்களுக்கே முன்னுரிமை !
இணைப்பைச் சுட்டி
பதிந்துடுவீர்
தேர்ந்தெடுத்த தலைப்புதனை !
அனைவரும் வாரீர்!
அனுமதி இலவசம்!!!

எழுதியவர் : கவியரங்கம் , மக்கள் , மிச்ச (16-Jul-19, 7:22 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 57

மேலே