இயற்கை

நேற்று நட்டுவைத்த மல்லிப்பூச்செடி
இன்று முதல் முதலாய் செடியெல்லாம்
குண்டு குண்டாய் மொட்டுக்கள் ...பூக்கள்
என்று செடியெல்லாம் பூத்துகுலுங்க
பூச்செடி பூவையாய் மாறிப்போனது
வளரும் பெண் பூப்பெய்தியதுபோல்
அந்த பூக்களின் வாசமும் மகரந்தமும்
கருநீல கரு வண்டொன்றை தன் வசம்
தன்னையறியாமலேயே இழுக்க - வண்டும்
poopoovaai மாறி மாறி சென்று இதழ்கள்
மல்லிப்பூவிற்கு தன் இதழ்களால்
முத்துக்கள் தந்து தேனுண்டு மகிழ்ந்து
மகிழ்ச்சியில் ரீங்காரம் செய்து பாடியது
ஒரு செடியும் ஒரு சதையும் பற்றுமுள்ள வண்டும்
நடத்தும் வினோத உறவாடலைக் கண்டு நான்
மல்லிச்செடியை என்னவளாய், அந்த கருநீல
கருவண்டை அவள் தேடிய நானாய் நினைத்தேன்
இயற்கை தூண்டி எழுப்பும் கற்பனை இது !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Jul-19, 8:19 pm)
Tanglish : iyarkai
பார்வை : 235

மேலே