அழுகை ஆயிரம்
அழுகை ஆயிரம் !
இயற்கையின் மோதல் இறுதியில்
அழுகையாய் தெரிந்திடும்
வானத்து மழை !
உழைப்பின் வலிமையால்
அழுகையாய் தெரிந்திடும்
உடலின் வேர்வை !
உள்ளத்தின் துயரங்கள்
உலகிற்கு காட்டிட
அழுகையாய் தெரிந்திடும்
கண்ணீர் பெருக்கு !
கதிரவனின் கோபத்தை
தாங்காமல் அழுகையாய்
கண்களுக்கு தெரிந்திடும்
கானல் நீர்
பொங்கி சிரித்து களைத்து
இறுதியில் வழியும்
ஆனந்த அழுகை !