கட்டவிழ்ந்து கலைந்தாடும் கூந்தல்

கட்டவிழ்ந்து கலைந்தாடும் கூந்தல்
கார்முகில் எழிலோ
கண்ணசையும் அசைவு எல்லாம்
கயல் நீந்தும் அழகோ
பூவிரிக்கும் புன்னகை எல்லாம்
காமன் எழுதிய புத்தகமோ
அத்தனையும் தாங்கி நடந்துவரும்நீ
தென்காசி ஆலயத்து ஆரணங்குச்சிலையோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-19, 11:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 135

மேலே