நீலவானம் ஒரு கவிதை எழுதினால்
நீலவானம் ஒரு கவிதை எழுதினால்
மெல்லத் தவழும் நிலவாகும்
நீர் ஒரு கவிதை எழுதினால்
துள்ளிச் செல்லும் நீரோடை ஆகும்
தடாகம் ஒரு கவிதை எழுதினால்
தாமரை மெல்ல விரியும்
காலை ஒரு கவிதை எழுதினால்
கதிர் எழுதும் ஓவியமாகும்
மாலை ஒரு கவிதை எழுதினால்
காதலின் மென் வரிகளாகும்
என் நெஞ்சம் ஒரு கவிதை எழுதினால்
அது உன்னைத் தவிர வேறு யாராகும் ?