காதல் தோல்வி

பெண்ணே!!!
உன்னைப் பார்க்க பகலில்
வந்தேன் நான்...
ஆனால்..,
என் உள்ளம் மறுத்தது
" நீ இரவில் செல்" என்று
ஏன் தெரியுமா??
இரவில் தோன்றும் நிலவை விட
அழகான உம்மை இரசிக்க
வேண்டும் என்பதற்காக..

பெண்ணே!!!
கவிதை ஒன்று கூறுகிறேன் கேள்!!
கவிஞனின் வெற்றி கவிதையைப்
படைப்பதில் மட்டுமே உண்டு...
ஆனால், என் தோல்வியால்
படைக்கப்பட்டதே இக்கவிதை
காரணம்...
நான் ஒன்றும் கவிஞன் அல்ல!!
உன் காதலன்!!

எழுதியவர் : கவிப்பித்தன் ismail (17-Jul-19, 6:12 pm)
சேர்த்தது : கவிப்பித்தன் ismail
Tanglish : kaadhal tholvi
பார்வை : 128

மேலே