விரைந்து வாடா

நெஞ்சத்தில் பச்சை குத்திய
உன் பெயர் மாறாதடா/
இந்த மச்சினி மனசும் மூடாதுடா/
தேவையோ இந்தச் சந்தேகம்
நீ தேடி வா சந்தோசம் /

முன்னாலே நீ
வந்து முறைத்தாலூம்/
கண்ணாலே
காதலை உரைப்பேனடா/
முகம் காட்டாமல்
நீ மறைந்தே சென்றாலூம்/
உனது உடல் வாசைனையிலே
உமைக் கண்டு பிடிப்பேனடா/

உனது மச்சினிச்சி நான் மருதாணி
இட்ட கரத்தோடு கரம் கோர்த்தாலே/
என்னுள்ளே ஆனந்தம்
வெள்ளோட்டமாய் ஓடுமடா/

ஆசை ஓயாமலே
உன்னைத் தேடுகிறது மச்சானே/
கலந்திடவே காலம் பார்த்துக்கோடா/
இணைந்திடவே நீயும் விரைந்து வாடா/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (18-Jul-19, 12:35 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 90

மேலே