வசந்த காலம்

வசந்த காலம் 😁🤝💪

இளமைகளின் ஊர்வலம்
இனிதே ஆரம்பிக்கும் இடம்
இனிமையின்
கொண்டாட்டம் இனிதே தொடங்கும் இடம்
திறமைக்கு தீனி போட்டு
அறிவாற்றலை வளர்த்துக்கொள்ளும் இடம்
எழுதி வைத்த புத்தகம் அனைத்தும் சில ஆசான்களின் மூலம் கற்பிக்கும் இடம்

போட்டி உண்டு, பொறாமை உண்டு, சண்டையும் உண்டு, ஆனால் இதையல்லாம் மீறி நட்பு என்ற மான்பும் உண்டு.

காதல் உண்டு, கவிதை உண்டு , காலத்தால் அழிக்க முடியாத காதல் கதைகளையும் உண்டு.

பத்து பைசா பாக்கெட்டில் இல்லை என்றாலும்
அம்பானி மனப்பான்மை
அதானி தைரியம் டாட்டா பிர்லா போல் நடை உடை பாவனை.

சாதி என்ற சாக்கடை இல்லை,
மதம் என்ற பேதமை இல்லை,
சாஸ்திரம் என்ற ஏமாற்று இல்லை,
சாங்கியம் என்ற பொய்யும் இல்லை
எங்கும் சமத்துவம் எதிலும் சமாதானம்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

கற்பனையின் உச்சம் வானம்
மலையின் உச்சம் சிகரம்
காற்றின் உச்சம் சூறாவளி
இளமையின் உச்சம் துனிச்சல்

மிறளும் மனதுடன் முதலாம் ஆண்டு முடிந்தது
பாதி கிணறு தாண்டியவுடன்
இரண்டாம் ஆண்டு வந்தது
முழுவதும் புரியவில்லை, முற்றிலும் அறிவதற்குள் முடிந்தது
மூன்றாவது ஆண்டும் .

கல்லூரிபயணம் அது
இரயில் பயணம் அல்ல
மறப்பதற்கு.
மறக்கமுடியாத, மறுக்கவும் முடியாத வாழ்க்கையின் அடிநாதத்தை தெரிந்துகொண்ட ஆழமான, விரிவான, இனிமையான பயணம்.

பறவைகள் அல்ல
ஆனால் சிறகடித்து பறந்தோம்
ஆடி பாடி மகிழ்ந்தோம்
தினம் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளித்தோம்
குதுகலம், கும்மாளம் ஆனந்தம்.

சுருக்கமாக
கல்லூரி என்பது மறக்க முடியாத வாழ்க்கையின்
வசந்த காலம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (20-Jul-19, 6:06 am)
சேர்த்தது : balu
Tanglish : vasant kaalam
பார்வை : 528

மேலே