வாழ்த்துக்கள் சொல்லும்

மணமேடையில்
மங்கள நாணும்
மலர் மாலையும் சூடி
மகிழ்வோடு வீற்றிருக்கும்
மணப்பெண்ணுக்கு
வாழ்த்துக்கள் சொல்லும்

மங்கள நாணில்
தடம் பதித்தத் தங்கம்
“எப்போதும் உன்னோடு
கூடவே நானிருப்பேனென
தைரியம் தந்து”
வாழ்த்தி மகிழ்ந்தது

மார்பை அலங்கரிக்கும்
மலர் மாலையோ
“மலரோடு சேர்ந்த
நாரும் மணப்பதுபோல்
என்றென்றும்சேர்ந்து வாழ”
வாழ்த்தி வணங்கியது

வாசலில் விடப்பட்ட
மிதியடிகளோ
“தங்களைப் போல்
எப்போதும் படிதாண்டா
பத்தினிபோல்”இணைந்து வாழ
வாழ்த்துகூறி மகிழ்ந்தன.

எழுதியவர் : கோ. கணபதி. (21-Jul-19, 8:56 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : vaalthukkal sollum
பார்வை : 93

மேலே