வாழ்த்துக்கள் சந்திராயன்2

நீரில் காணமல் போனவர்களை கண்டுபிடிக்க துப்பில்லாதவர்கள்
நிலவில் உப்பிருக்கிறாத என்று ஆராய்ச்சி செய்ய போகிறார்களாம்

நிலவின் தென்கோடி பகுதியை
கவனிக்க நேரமிருக்கும் அவர்களுக்கு
நிலத்தில் இருக்கும் தெருக்கோடி
மக்களை கவனிக்காமல் இருப்பது ஏன்?

3,84,000 கிமீ தொலைவை பாய்ந்து செல்ல 984 கோடி செலவில்
ஏவுகணை அனுப்பிய அரசுக்கு
இறந்த சடலங்களை
மருத்துவமனையில் இருந்து
ஒரு மூனு கிமீ
வீடுக்கு கொண்டு செல்ல
ஆம்புலன்ஸ் வசதி செய்யாது ஏன்?

விண்ணில் முன்னேறி செல்வதாக நினைத்துக் கொண்டு
மண்ணில் பின்னடைந்து சென்று கொண்டிருக்கிறார்கள்!

வாழ்த்துக்கள் சந்திராயன் 2

-சேக் உதுமான்

எழுதியவர் : சேக் உதுமான் (23-Jul-19, 8:43 pm)
பார்வை : 470

மேலே