இப்படிக்கு உன் காதலன்

உன் கண் பார்வைக்கு பலியான பனித்துளி நான்.....
உன் சின்னதொரு சிரிப்பிற்கு விழுந்தவன் நான் ....
உன் விரல் தொடும் நாளை எண்ணி கிடந்தவன் நான் ....
உன் ஒவ்வொரு அசைவையும் படித்தவன் நான்....
நான் ரசித்த பெண்களிலே எனை இழுத்த தேவதை நீ ...
எதற்கோ பிறந்த வாழ்க்கையிலே எனக்காக பிறந்தவள் நீ....
நீ சுவாசித்த காற்றையும் சேர்த்து நேசிக்க பிறந்தவன் நான் ...
உன் காதலன் நான்........
- கலியுக பாரதி

எழுதியவர் : கலியுக பாரதி (24-Jul-19, 3:53 pm)
சேர்த்தது : sankar
பார்வை : 403

மேலே