தப்பு தப்பாது

தப்பு தப்பாது.
*****
○○ நான் தாண்டா அவன், அவன்தான்டா நான்னு சொன்னேன்; அவன்னா எவன்னு கண்டுபிடிக்க முடியல... இல்ல, எப்படி முடியும் முதுகில் குத்தும் பயந்தாங் கொல்லிக்கெல்லாம் எப்படி கண்டு பிடிக்க முடியும், எரியும் விளக்கை ஊதி அனைகிறவனுக் கெல்லாம் எப்படி முடியும், ஒன்னா அன்பாக வாழும் குடும்பத்தை கலைக்கிறவனுக்கெல்லாம் எப்படி முடியும் ○○ என்று அவன் தந்தையை என்னைக்கு இழந்தானோ அன்னைக்கு பிறந்த மகன் சொல்கிறான் தன் தந்தையை கொன்றவனிடத்தில்

○○ நீ யாரு...? ○○

○○ யாருக்கும் அப்பன் ஆகும் வயதை இன்னும் எட்டல, வேணும்னா என்னை உனக்கு அப்பனா நெனைச்சிக்கோ
நல்லா பாரு, உற்றுப் பாரு, ஒரு பொண்டாட்டி மூனு பொட்டும் பொடியும் ஒன்று வயிற்றில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த என்னை ஏமாற்றி கூட்டிக் கிட்டு போய் குடியை ஊத்தி குடிக்கக்கொடுத்து, ஒருத்தியை கூட்டியாந்து கூட்டி கொடுத்து மயங்கி போன சமயம் பார்த்து என்னை கூறு போட்டு விட்டு; ஊரு விட்டு ஓடி தலைமறைவானவன் தானேடா நீய்யீ கேவலம் தொழிளார் சங்க தலைவர் பதவிக்காக அதிலே வருமானம் பார்க்க;
ஏன்னா அவங்க அவங்களுக்கா சேக்கிர பணத்தை நீ நகர்த்திக்கிட்டு போய் உன் பொண்டாட்டி புள்ள குட்டியை காப்பாத்திக்கத்தானே என்னை கொன்னே ○○

○○ உன்னை நான் கொன்னேனா , தமாசு கிமாசு பண்ணலியே , நீ என் எதிரில் உயிரோடு நின்னுகிட்டு இருந்துகிட்டு, நான் உன்னை கொன்னேன் என்கிறே டேய் இவனுக்கு என்ன மர கிர கழண்டு போச்சா என்ன? கூப்பிட்டு என்னான்னு கேளுங்கடா ○○

○○ டேய்....யாரும் கிட்ட நெருங்காதீங்க, நான் கடுப்பாகி இருக்கிறது அந்த கொலைக்காரன் மேல உங்க மேல இல்லை இவனுக்கே சாயங்காலம் வரைக்கும் அவன் ஆடுன்னா ஆடிட்டு பாடுன்னா பாடிபட்டு போய் அவங்கவங்க பொண்டாட்டி புள்ளகுட்டிங்கள கண்ணால் பாக்கணுமா வேணாமா ஒதுங்கும், நான் தொழிளார் சங்க தலைவனாக இருந்த சொக்கலிங்கம் பேசுறேன்டா, கேட்குதா...... ○○ என்று அடிகுரலால் குத்தினான் இடமே அதிபரும் படிக்கு

○○ இல்ல...இல்ல...யாரை கொன்னேன் ? எங்கே கொன்னேன் ? எப்போ கொன்னேன் ? சொக்கலிங்கத்தை கொன்னது யாருன்னு எனக்கு ஒன்னும் தெரியாது நீ ஏதோ ஒரு காரணத்துக்காக பழியை என் மேல போடுறே, அந்த பதவிக்காக தானே வந்துக்கோ ••••••

••••••• யாரை ? எங்கே ? எப்போவா ? உங்க அப்பன் தப்பு அடிக்கையிலே
யாரையா ....நியாயமா நடந்த என்னை, நேர்மையா நடந்த என்னை , ஒலிவு மறைவு இல்லாத என்னை, பிறத்தியார் பொருளுக்கு ஆசைப்படாத என்னை, மாதாமாதம் வசூலிக்கப்படும் சந்தா தொழிலாளர் சங்கத்தில் கணக்கு ஒவ்வொருவர் கையிலும் வைத்திருக்கச் சொன்ன என்னை, இவ்வளவு இன்னதுக்காக உங்க கையால் செலவானது, இவ்வளவு கையிருப்பு இவ்வளவு என்ற கணக்கை எல்லோர் கையிலும் காணமுடிய செய்த என்னை; அதனால் நான் தொழிலாளர் சங்க தலைவனாக நெடுந்தூரம் நீட்டிக்கொண்டிருந்தேனே அந்த ஒருத்தன் நான் தான் சொக்க லிங்கம் ,யாரு...சொல்றா ○○

○○ சொக்கலிங்கம்○○

ஆமாம் நானே தான் , அப்படிப்பட்ட என்னை துண்டு துண்டாக வெட்டிப்போட்டவன் தானே நீ, எலியோரை வலியோர் வாட்டினால் வலியோரை தெய்வம் வாட்டும் என்பது பொய்யாக வில்லையடா, காக்கிச்சட்டையரை விலைக்கு வாங்கி தப்பிச்சிக்கிட்டே, கருப்ச்சட்டையரை விலைக்கு வாங்கி தப்பிச்சிக்கிட்டே , நீதிபதியை விலைக்கு வாங்கி தப்பிச்சிக்கிட்டே , இத்தனை பேரை விலைக்கு வாங்கின உன்னால உன்னோட...உன்னோட உன்னுள் உள்ள மனசாட்சியை விலைக்கு வாங்கி தப்பிச்சிக்க உன்னால முடிஞ்சதா ..முடிஞ்சதாடா... முடியலையே ஏன்?, உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகனும்...என்ன குடிச்சே ஆகணும்○○

○○ தண்ணி குடிச்சே ஆகனும்○○

ஜ○○ வெரிகுட் ....தண்ணி குடிச்சே ஆகனும் அது தான் தலைவிதி நல்ல சேதி இல்லையா? பசுத்தோல் போர்த்திய புலியே இந்த புலிப்பல் கோர்த்த சங்கிலி இது யாருடையது தெரியுமா ○○

○○ என்னுடையது...தான் (என்று சொன்னவன் அவன் மண்டையிலேயே அவனே அடித்துக்கொண்டு பிறகு) இல்லை.. இல்லை என்னுடையது இல்லை அதைப்பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது அது யாருடையதோ என்னைக் கேட்டால் எனக்கெப்படி தெரியும் ○○

○○ இதை எங்கே வாங்கியது யார் வாங்கினது என்ற சரித்திரம் இந்த சீட்டில் இருக்கிறதே, உன்னையே அறியாமலேயே பயபீதியால உளறி கொட்டிட்டே ஒரு மந்திரவாதி கிட்டே ஞாபகம் இருக்கிறதா, ஞாபகம் இல்லையா , இது என்ன தெரியிதா உன்னோட பத்து பவுன் புலிப்பல் கோர்த்த சங்கிலி; •••••

•••••••• இதை என்னைக்கு வாங்கி கழுத்தில் மாட்டினாயோ அன்னைக்கு ஆரம்பிச்சது உனக்கு சனி என்றான் மந்திரவாதி, அதனால சங்கிலியை அந்த மந்திரவாதிக் கிட்டேயே கழட்டி கொடுத்துவிட்டே ஆமாவா? இல்லையா ? ; •••••

••••••• இப்போது நான் சொல்றேன் அந்த சங்கிலியை என்னைக்கு கழட்டினாயோ அப்பவே நடைபோட ஆரம்பித்து விட்டது உன் பின்னால் சனி ; இப்போது இந்த சங்கிலி உன்னுடையதும் இல்லை நல்லவாயன் சம்பாதிக்க நாறவாயன் தின்னு பார்க்க விடமாட்டேன், •••••

••••••• சங்கத்து பணத்தை கையாடிய பணம், அந்த சங்கத்துக்கே போய் சேரட்டும், •••••

•••••• இப்போது சொல்வது சொக்கலிங்கம் இல்லை, அவரோட மகன் காசிலிங்கம் பேசுறேன் எங்க அப்பா இருந்த இடத்தில் என்னை போட்டாச்சி இனிமேல் நான் தான் எல்லாமும் •••••••

••••••••• சங்கிலியை சங்கத்தில் சேர்த்ததும் எல்லோரும் ஆனந்தம் கொண்டாடினர் ○○

○○ இது எல்லாம் உனக்கெப்படி தெரியும், இந்த சங்கிலி உன் கைக்கு எப்படி வந்தது நீ யார் என்ன வேணும் உமக்கு ○○

○○ நானா சொக்கலிங்கத்தின் மறு பிறப்பு காசிலிங்கம் கண்ணா, ம்...என்ன வேணும் உனக்குன்னு கேட்டாயில்ல, ( கேட்க கூடாத கேள்விகள் கேட்டால் எகிருகிறானா இல்லை அடங்கி போகிறானா அப்படி அடங்கி பதில் சொன்னால் பயந்து விட்டான் என்று ஆகும் என்று காரசாரமான கேள்வியை கேட்போம் என்று ) உன் தங்கச்சி வேணும் கட்டிக்கொடுக்கப்போகிறாயா இல்ல கூட்டிக்கொடுக்ப் போகிறாயா ○○

○○ உனக்கு எது சவுகரியமோ அப்படியே எடுத்துக்கோ○○

○○ ஏன்னா அவளை சுமந்து பெத்தவங்களுக்கு தான் தெரியும் பெத்த வலி, அவங்ககிட்டே போய், அவ வேணுமுன்னு கேட்டதுக்கு உயிரை எடுத்து இருப்பாங்க, நீ அவளை பெத்தவன் இல்லை கூடப்பொறந்தவன் தானே அதனால சர்வசாதாரணமாக எடுத்துக்கோ என்கிறே, உன்னோட மகள் வேணும், கட்டிக்கொடுக்கப் போகிறாயா இல்ல கூட்டிக்கொடுக்ப் போகிறாயா ○○

○○ உனக்கு எப்படி இஷ்டமோ அப்படியே எடுத்துக்கோ ○○

○○ உன்னோட பொண்டாட்டி வேணும் ஓட்டிவிட பாக்குறீயா இல்லை கூட்டிவைக்க பார்கிறாயா ○○

○○எடுத்துக்கோ என்னை விட்டுவிடு ○○

○○ அடே...காரியக்காரனடா நீ. உனக்கு கூட பொறந்த தங்கை முக்கியமில்லை, பெற்ற மகள் முக்கியமில்லை, ஏன் கட்டிய மனைவி முக்கியமில்லை உனக்கு உன் உயிர்தான் முக்கியம் அப்படிதானே அந்த மூனு பேருக்கும் உன் சுய ரூபம் தெரிஞ்சா உன்னை வெட்டி கூறு போட மாட்டாங்க என்று என்ன நிச்சயம் •••••

••••••• வீரம் செரிந்தவன் எவனும் இப்படியாக ஒரு காலமும் சொல்லமாட்டான் அப்படி என்றால் நீ எந்த அளவுக்கு பயந்து இருக்கேன்னு தெளிவாக தெரியுது •••••••

•••••• சங்கத்தில் இருந்து சில பொம்பளைங்களை நீ பண ஆசைக்காட்டி பெரிய பெரிய அதிகாரிகளுக்கு தள்ளிவிட்டு அதுல கமிஷன் அடிச்சி வயிறை கழுவினவன் தானேடா நிய்யீ ○○

நான் எவனுக்கும் தெரியாமல் தானே இந்த சம்பவம் செய்தேன் அது இவனுக்கு மட்டும் எப்படி தெரியவந்தது
என்று யோசிக்கிறான்

ஒருவேளை செத்தவன் சொக்கலிங்கத்தின் ஆன்மா போய் சேரவேண்டிய இடத்தில் போய் சேராமல் செத்தவனுக்கு பொறந்தவனுள் நுழைந்து இருப்பானோ அவன் ஆன்மா இவன் மேல் புகுந்து நமக்கு ஆப்பு அடிக்கிறதோ மனம் வேறு, உயிர் வேறு, ஆன்மா வேறு என கருதினாலும் இதில் எது என்னை பழி தீர்க்க முனைந்துள்ளது என்றே கண்டுக்கொள்ள இயலவில்லையே மனம் உடைந்து போனான் கொலைகாரன்

எதையெல்லாம் மறைவாக செய்தேனோ அவையெல்லாம் ஆதாரத்தோடு சொல்கிறானே இவனையும் செஞ்சிடுவோம் என்றால் இவனில் இருந்து இன்னொருவன் வரமாட்டான் என்று ஒன்றும் நிச்சயம் இல்லையே

இந்த உண்மைகளை அறிந்து அவனை வேலையைவிட்டே நிர்வாகம் தூக்கிவிட்டது, அவனது பிடிப்பு பணம் மற்றும் செட்டில்மென்ட் எல்லாமே நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது

நிறுவனமே அவன் மேல் வழக்கு போடவில்லயென்றால் நிரவனத்திற்கு கெட்ட பெயர் வரலாம், இழுத்து மூடும் நிலை வரலாம் என்று அவன் மேல் வழக்கு தொடரந்து உள்ள தால் வழக்கு நிறைவுபெறும் வரை காலணா கைக்கு வராத சூழல் நிலவியது

அவனது மனைவி பிள்ளைகள் முதற்கொண்டு தம்மை கொலைக்காரன் மனைவி என்றும் கொலைகாரன் பிள்ளைகள் என்றும் இழிபெயர் வந்துவிடக்கூடாதென்று அவனது மனைவி பிள்ளைகளோடு தனது தாய்வீட்டில் தஞ்சமடைந்தனர்

வழக்கு வாயைத்திறந்து உண்மையை வழுக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டான் ஆயுள் கைதியாக பதவி ஆசை குறுக்கு வழி வருமானம் காட்டிய பாதைதான் நிகழ்வது இத்தனையும் கண்கெட்டப் பின்னே சூரியவழிபாடு செய்தால் என்ன செய்யாது போயென்ன
°°°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கத்தான்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (25-Jul-19, 3:07 pm)
பார்வை : 180

மேலே