காதோரம் சொல்வேனடி

அன்பே
அழகிய உந்தன் கண்ணோரம்
கண்ணீர் வழிய
உன் உறவுகளெல்லாம்
ஆனந்த கண்ணீர் சிந்திய நாளிது...

பூவெல்லாம் வாசம் கேட்டு
தவம் செய்ய
பூவே புதிதாய் தோன்றிய நாளிது...

தித்திக்கும் தமிழோடையிலே
திரண்டுவந்த சொல்லெடுத்து
திங்களே(...) உனக்கு
பெயர் சூட்டிய நாளிது....

வெண் பாலின் நிறமெடுத்து
உன் பற்களுக்கு
நிறம் தீட்டிய நாளிது...

கார்முகிலின் நிறம் பிரித்து
கூந்தளுக்கு நிறம் பூசிய நாளிது....

முத்தங்கள் உன்னை பதிக்க
"முழுநிலவே" முத்தாக
நீ கிடைத்த நாளிது...


இதழசைத்த உன்னை கண்டு
இந்த உலகமே இன்பம் கொண்ட
நாளிது....

தவழ்ந்து நீ விளையாட
தரையெல்லாம் தங்கமாக மாறிய
நாளிது...

நடந்து நீ பழக
தரையெல்லாம் தாமரையாக
பூர்த்த நாளிது...

புள்ளிமான் உந்தன்
தேகம் படற
பூமியெல்லாம் பூவாக பூர்த்த நாளிது...

நிழல் தொடா என்னோடு
உன் நினைவுகள்
பின் தொடர்ந்த நாளிது...

ஊடல் கொண்டு வாழ்ந்தாலும்
தேடல் கொண்டு தேடும் நாளிது...

நாளொன்றுக்கு வாழ்த்து சொல்ல
நாளெல்லாம் நான் காத்திருக்கும்
நாளிது...

நினைத்தாலே இனிக்கிறது
நினைவெல்லாம் தித்திக்கிறது
நிழலொன்று நிஜமான நாளிது...

வார்த்தைகளால் சொல்லி
நிரப்பிவிட முடியாது!
வாழ்த்துக்களை நிராகரித்து விட முடியாது
வெளிவரும் மூச்சும்
வட்டமிட்டு வாழ்த்து சொல்லும் நாளிது...

தெருவோரம் தேய்ந்து வளரும்
நிலவுக்கு கூட
தினம் தினம் பிறந்த நாளாம்! தேயாத
"என்னவளுக்கு" ♡♥♡இன்றுதான்
பிறந்தநாளாம்!!!

ஒருமுறை பிறந்தவளே
ஓரப்பார்வையை வீசியவளே
என்னுள் கலந்தவளே
எண்ணங்களில் நிறைந்தவளே
தொல்லையின் தோழியே
தொடராத விழியே
அன்பின் இலக்கணமே
அழகின் தலைக்கனமே
எழுதிய உயிலே
எழுதாத துயிலே
பூவாக பிறந்தவளே
புன்னகையோடு வாழ்ந்தவளே
கவிதையின் வரியே
காவியத்தினை தலைவியே
தித்திக்கும் சுவையே
சந்திக்கும் மழையே
அரும்பான மலரே
விரும்பாத திமிரே
சொல்லின் பொருளே
சொல்லாத இருளே
கருப்பு எழிலே
காந்தகண் அழகே
வெயிலின் நிழலே
குழலின் குரளே
பேசும் சித்திரமே
பேசாத விசித்திரமே
வண்ணம் தீட்டா ஓவியமே
வார்த்தை தீட்டா காவியமே
கொஞ்சும் குளிர் காற்றே
கோடையின் வாடைக் காற்றே
அதிகாலை சுடரே
அந்திமாலை ஒளியே
கலையாத கனவே
உருகாத நினைவே
நான் காக்கும் ரகசியமே
நகர்ந்து நிற்கும் அவசியமே
ஆடியில் பிறந்தவளே
ஆறுயிரில் கலந்தவளே
மழலை சிரிப்பில்
என் மனதை பறித்தவளே!
காற்றில் உந்தன்
வாசம் உள்ளவரை...!
காவலாக எந்தன்
நேசம் உள்ளவரை...!!
உன் காதோரம் சொல்வேனடி
கள்ளியே...
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (28-Jul-19, 12:00 am)
பார்வை : 1041

மேலே