எது பழையது , எது புதியது
புதுக் கவிதை ….. என்ன இது
கவிதை என்று பழையதாய்ப் போனது
குறளும் கம்பன் காவியமும்
பாரதியின் அமுத பாடல்களும்
என்றும் எப்போதும் புதுக் கவிதைகளே
என்ன வேதம் புதிது ….?
காதல் வேதம்…….?
இவை என்ன பிதற்றல்கள்
வேதம் யார் எழுதியது
அது ஆதி வேதன் சொன்னது
அது என்றும் எப்போதும் புதியதே
நாம் அழியும் நாம்தான்
பழமை, புதுமை காண்பவர்