குற்றங்கள்

அனைவரால் சிதைக்கப்பட்ட மனநிலைகள் கல்லுக்குள் தேரை போலிருக்க..,
பிழைகள் மட்டும் இரைச்சல்களாய் ரணப்படுத்துகிறது...!
உரக்கச் சொல்லாமல் மௌனமாய் புதைந்த வலிகளில் குளிர்காயும் உறவுகள்...!..,
குற்றங்கள் எனதாகிப் போக.., படிகங்கள் எறியப்பட்ட மனக்குளமாய் மனநிலைகள்..!
சொற்களின் வீரியமும் குறைந்தது.., உறவுகள் வேண்டும் என்பதால்..!

எழுதியவர் : SARANYA D (1-Aug-19, 5:02 pm)
சேர்த்தது : சரண்யா கவிமலர்
பார்வை : 116

மேலே