அன்பு

விடியலை நோக்கி துயிலை
ஏற்கும் எதார்த்த மனிதர்கள்
நாம்....

மனதில் ஆசைகள், விருப்பங்கள்
நிறைவேறும் என
நினைக்கும் எதார்த்த
மனிதர்கள் நாம்....

நினைத்தவை தாண்டி
சூழ்நிலை, விதி, சந்தர்ப்பம்
என பலவற்றை அறிந்தும்
எதிர்பார்ப்பு கொண்ட
எதார்த்த மனிதர்கள் நாம்.....

இதில் துரோகி யார்?
இதில் எதிரி யார்?
இதில் நண்பர்கள் யார்?

மகிழ்ச்சியாக வாழ்
பிறரை வாழ வைத்து வாழ்.....

எழுதியவர் : உமா மணி படைப்பு (5-Aug-19, 3:26 pm)
சேர்த்தது : உமா
Tanglish : anbu
பார்வை : 1673

மேலே