தென்னம் பிள்ளை சின்னப் பிள்ளை

தெருவோரம் ஒரு வீடு
வீட்டின் சுவரோரம் ஓரு சின்னத் தென்னை மரம்
தென்றலில் ஆடுது தென்னங் கீற்று
தென்னம்பூ பூவாய்ப் பூத்துக் குலுங்குது
செவ்விளநி காய்த்துக் குலுங்குது
பறித்துத் தின்றால் என்ன என்று மனம் துடித்தது
ஆவலை புரிந்து கொண்டானோ என்னவோ
பின்னாலிருந்து வந்த வீட்டுச் சொந்தக்காரன்
கையருகே தொங்கிய செவ்விளனியைப் பறித்துத் தந்தான் கையில்
மகிழ்ச்சிதானே என்றான் .......மகிழ்ச்சிதான் ஆனாலும்
திருடி அருந்தியிருந்தால் இன்னும் இனித்திருக்குமோ செவ்விளனி
என்ற எண்ணம் ஓடிய ரகசியம்
இந்த சின்னப் பிள்ளைக்கும் அந்த தென்னம் பிள்ளைக்கும் மட்டும்தான் தெரியும் !

எழுதியவர் : கவின் சாரலன் (11-Aug-19, 9:40 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 168

மேலே