நறுந்தொகை 28 - 29
28. அடினும்பால் பெய்துகைப் பறாதுபேய்ச் சுரைக்காய்.
29. ஊட்டினும் பல்விரை யுள்ளிகம ழாதே.
- அதிவீரராம பாண்டியர்
பொழிப்புரை: பேய்ச் சுரைக்காயைப் பால்விட்டுச் சமைத்தாலும் அதன் கசப்பு நீங்காது.
உள்ளிப் பூண்டுக்குப் பல வாசனைகளை ஊட்டினாலும் அது நறுமணம் கமழாது (தீநாற்றமே வீசும்).
கருத்து:
இவ்விரண்டு வாக்கியமும், சிறியோர்க்கு எவ்வளவு நன்மை செய்தாலும் அவர்கள் தம் சிறுமைக் குணத்தைக் கைவிடார் என்னும் கருத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன.