நாணத்தின் மாயக்கண்கள்

நாணத்தின் மாயக்கண்கள்
==========================================ருத்ரா

மோப்பக்குழையும்
அநிச்சம் என்றார் வள்ளுவர்.
அனால் நீயோ
உன் முகத்தை ஒரு அநிச்சம் கொண்டு
நோக்கினாலும்
குழைந்து நாணி என்னை
நோக்கவே மாட்டேன் என்கிறாயே.
பார்!
இந்த அநிச்சப்பூக்களை.
இவை உன் வீட்டுத்தோட்டத்தில்
அரும்பு அவிழும் முன்னரே
கூம்பி விடுகின்றன‌
உன் நாணம் கண்டு.

நீ தலை குனிந்து என்னை நோக்கியதில்
உன் ஓர் அழகு ஆயிரம் அழகாய்
விரிந்தது
நிமிர்ந்தது.
உன் நாணத்தின் மாயக்கண்கள்
எப்படி என்னை படம்பிடித்தது?

=====================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (14-Aug-19, 12:53 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 126

மேலே