மாற்றிக் கொள்வதில்லை

தத்துவ பேராசிரியர் ஒருவர்
தன்னை கழுதையென்று
கூறியதற்காகக்
கணித பேராசிரியர் மீது
மானநஷ்ட வழக்கு
போட்டார்

கணித பேராசிரியருக்குக்
கோர்ட்டார் அவர்கள்
அபராதம் விதித்தனர்,
அப்பொழுது கணித பேராசிரியர்
கோர்ட்டாரை பார்த்து கேட்டார்
“கழுதையைப் பார்த்து
தத்துவ பேராசிரியர் என்றால்
அது குற்றமா? “ என்றார்

கோர்ட்டார் அவர்கள், அது
குற்றமாகாது என்றவுடன்
கணித பேராசிரியர்
தத்துவ பேராசிரியரே—நான்
போய் வருகிறேனென்று
சொல்லி புறப்பட்டார்
கோர்ட்டார் சிரித்தார்கள்,
தண்டனை பெற்றாலும்
தங்கள் கருத்தை சிலர்
மாற்றிக் கொள்வதில்லை

எழுதியவர் : கோ. கணபதி. (18-Aug-19, 8:44 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 58

மேலே