பெண்

எண்ணத்தில் இப்படி இப்படித்தான்
வாழவேண்டும் என்று எண்ணி எண்ணி
கற்பனையை வளரவிட்டேன் , அது
ஓர் பறவையாய் உருவெடுத்து விண்ணில்
பறந்து சென்றது சுதந்திரமாய்
ஓ ஓ என் கற்பனையாவது சுதந்திரமாய்
பறக்கின்றதே ….. என்று எண்ணி
கூண்டுக்கு கிளியாய் வீட்டில்
அடைபட்டு கிடக்கும் பெண் நான்
வேறு வழியின்றி கனவுலகில் வாழ்ந்து வருகின்றேன்
'சுதந்திரமாய் இன்னும் வாழ வலி தெரியா
பெண்கள் ……. சுதந்திர நாட்டில் '!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Aug-19, 11:47 am)
Tanglish : pen
பார்வை : 102

மேலே