ஊடுகதிரே

ஊடுகதிரே. . . .

உடுகதிராய் . ..
உள்ளம் நுழைந்தாள்
நுண் கதிராய் தாக்குகின்றாள்
செங்கதிராய் சிலநேரம்
செதில் செதிலாயாய் கிழிக்கின்றாள்
நெற்கதிரே. .. நிர்கதியாய்
விடாதே - நிலக்கிழங்கே
நீங்கா நினைவே
விழிப்பாராமல் விடியுமா கிழக்கிங்கே
செவ்வாயுதிரும் வார்த்தைகள்
இவன் சீவன் காக்கும்
சுற்றியெரியும் உன் சுடர்விழி
சுகமாய் இவன் உயிர் தாக்கும்
கண்ணாமூச்சி போதுமடி
உன் காந்த விழியால்
என்னை சிறை எடுடி
விழிக்கடலில் விழுந்த என்னை
கரைசேர்த்திட கரம்கொடடி!
இவன் மு.ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (19-Aug-19, 2:01 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
பார்வை : 71

மேலே