சொல்லாமலே

சொல்லாமலே. .

உயிர் என்றால்
உறவென்றால்
உள்ளியங்கும் இதயம்
நீ என்றால்
உணர்வென்றால்
உள்ளம் நீ என்றால்
நினைவென்றால்
நீக்கமற இருப்பேன் என்றால்
நீங்கா நிழல் நானென்றால்
நிமிடம் மூடா இமையென்றால்
அவளின் நிம்மதி நானென்றால்
கண்ணின் மணியென்றால்
காணும் காட்சி நானென்றால்
மூச்சென்றால் அவள்
பேச்சு நானென்றால்
திசை என்றால்
என்னை இசையென்றால்
எல்லாமாய் இருப்பேனென்றால்
அவள் ஏமாற்றுவாள்
என்பதனை
மட்டும் ஏனோ
சொல்லாமலே கொன்றுவிட்டால்.
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு.ஏழுமலை (19-Aug-19, 2:12 pm)
Tanglish : sollaamale
பார்வை : 225

மேலே